சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு அரசுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அவதூறாக விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில் மாலத்தீவுக்கு சொந்தமான அரசு இணையதளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.