பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக  தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.