மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மதுரையை சேர்ந்த விவசாயிகள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.