தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சி சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் படப்பிடிப்பில் இருந்த ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் தீக்காயத்தால் அவதிப்பட்டு வரும் தகவலை அறிந்த விஷால் தன்னுடைய மக்கள் நல மன்றத்தின் மூலம் 50,000 ரூபாயை அவரின் குடும்பத்திற்கு கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில், விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் பிரபா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று நேரடியாக 50000 ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் விஷாலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.