சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது. இப்போது சென்னை அருகில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் கடைசியில் முழு படப்பிடிப்பையும் முடிக்க பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.

சூட்டிங் முடிந்ததும் உடனே டப்பிங், இசை கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை துவங்க உள்ளனர். அப்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும். இந்த படம் ஆகஸ்டு மாதம் (அ) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.