புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 92.41% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் 85.35% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.