ஷிவ் நாடார் பல்கலைகழகத்தின் மாணவர், சக மாணவியை சுட்டுக் கொன்றதோடு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள தாத்ரி அருகில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர், மாணவியை சுட்டுக் கொன்றார்.

அதன்பின் அவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அம்மாணவி நேஹா சௌராசியா என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் உத்திரபிரதேசத்திலுள்ள கான்பூரில் வசிப்பவர் ஆவார். அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் அனுஜ் அம்ரோஹாவில் வசிப்பவர் ஆவார்.