EPFO பல காரணங்களுக்காக பகுதியளவு தொகையை திரும்பப்பெற அனுமதித்தாலும், அதில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது. பல காரணங்களில் நீங்கள் ஒருமுறை மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படுவீர்கள். எனினும் சில சமயங்களில் ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்கும் வசதியானது கிடைக்கும்.

அதன்படி, ஒரே நோக்கத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை பணத்தை எடுக்கலாம். எப்போது ஒன்றுக்கு அதிகமான முறை PF-ல் இருந்து பணத்தை எடுக்க இயலும்? என்பது குறித்து தற்போது அறிவோம். உங்கள் உடன்பிறந்தவர்கள், உங்களது மகன் (அ) மகளின் திருமணத்திற்காக பணத்தை எடுக்க விரும்பினால் நீங்கள் 3 முறை பகுதியளவு தொகையை எடுத்துக்கொள்ளலாம். மேலும் உங்களது பிள்ளையின் மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு 3 முறை பணம் எடுக்கலாம். இதற்கென பணியாளரின் வட்டியில் 50சதவீத தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.