தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் இருந்து பெய்து வரும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கண மழை பெய்யும் மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.