தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம் எனவும் நிலத்தடி நீரை தேவைக்கேற்றவாறு விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.