இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வெள்ளத்திலிருந்து தப்பிய இரண்டு குரங்கு குட்டிகள் தண்ணீரிலும் சேற்றிலும் மூழ்கி இருக்கிறது. அவை குளிரில் நடுங்கியபடி ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு அமர்ந்துள்ளது. அவற்றுக்கு உதவி தேவை என்பது அவற்றின் முகத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போது நபர் ஒருவர் இந்த குரங்கு குட்டிகளின் பசியை போக்கியுள்ளார்.

அதாவது அந்த நபர் பால் பாக்கெட்டுகளையும் கால் பாட்டில்களையும் கொண்டு வந்து பாட்டிலில் பாலை விட்டு அதை முதலில் ஒரு குரங்கிடம் கொடுக்கிறார். அதற்குள் இரண்டு குரங்குகளும் ஏக்கத்தோடு அந்த பால் பாக்கெட்டை பார்க்கும் போது கண்கலக வைக்கிறது. ஒரு குரங்கு பாலை குடிக்க மற்றொரு குரங்கு தன் வாய்ப்புக்காக குளிரில் நடுங்கியபடி காத்திருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.