இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் ரயில், பேருந்தில் சாகசம் என்ற பெயரில் மோசமாக செய்யும் செயலானது அவர்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. சமீப காலமாகவே பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கி கொண்டே பயணிக்கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்க்கும் பொழுது அவர்கள் காட்ட நினைக்கும் பந்தா கடைசியில் அவர்களுடைய உயிரை பறித்து விடுகிறது.

இதுபோன்று அதிகமான விபத்து காட்சியை நாம் பார்த்து வருகிறோம். அதேபோன்று இந்த வீடியோவில் நபர் ஒருவர் வேகமாக சென்று கொண்டு இருக்கும் ரயிலில் வாசல் படியில் சாகசம் செய்து பயணித்த நிலையில் பக்கவாட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுகிறார். இந்த வீடியோ படிக்கட்டில் பயணம் செய்து பந்தா காட்டும் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

https://twitter.com/i/status/1682629807866097665