சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை , நீர் வளம் ஆகிய துறைகள் இணைந்து சாலை வெட்டுக்களை சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். மரம் வெட்டும் இயந்திரங்கள், மோட்டார்கள், மண்ணள்ளும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான இடங்களில் மரக்கிளைகளை அகற்றுவதுடன் மழை நீரை அகற்ற பல்வேறு அளவுகளில் குழாய்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.