தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்வாரியம் சார்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் தடங்கல் தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில் அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக அவற்றை சரி செய்து அனைவருக்கும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்.

மின்னகம் மூலம் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தங்கள் அலுவலகங்களில் இதற்கான தனிக்குழுவை அமைத்து மழைக்காலங்களில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்துள்ளார்.