தமிழகத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் சமீபத்தில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் இழந்த நிலையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும், போதை பொருள் என்று சொல்லக்கூடிய கூல் லிப் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனையின் போது அவர்களை சோதித்து பார்க்க வேண்டும். மாணவர்களின் பற்களில் ஏதாவது கரை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். உளவியல் நிபுணர் ஆகியோரை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.