தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதுக்கள் மற்றும் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 590 என்ற எண்ணில் புகார் கூறலாம் என அரசு கூறியுள்ளது.