வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசாவுக்கும் வடக்கு ஆந்திர பிரதேசத்திற்கும் இடையே கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.