மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்(35) தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனத்தபுரத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்