லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்துக்கான வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில்,  விஜய் தலைமையில் லியோ பட வெற்றி விழாவிற்கு போலீஸ் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது.

விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ, அதுவரைதான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். விழா நிகழ்ச்சிக்கு 200 முதல் 300 கார்கள் வரலாம். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்துக்கு அனுமதியில்லை என கட்டுப்பாடு விதித்துள்ளது.இந்நிலையில், வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது