அமெரிக்காவில் உள்ள மியாமி டேட் கவுண்டி பகுதியில் தனது காதலருடன் வசித்து வந்தவர் ஜிமினெஸ். இந்த காதல் ஜோடி தாங்கள் வளர்க்கும் நாய்க்கு போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை வைத்திருந்தனர். இந்நிலையில் காதலன் மற்ற பெண்களை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த ஜிமினெஸ் ஊசிகளில் ஒன்றை எடுத்து தனது காதலனின் கண்ணில் குத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் காதலன் காயத்துடன் காவல்துறையினருக்கு அழைத்து உதவி கேட்டுள்ளார். இதையடு்த்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதலனை காப்பாற்றியதோடு வெளியில் நிறுத்தப்பட்ட காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்தனர்.