உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான 50 சதவீதம் இடங்களை தமிழக அரசே நிரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தலா 25% ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறிய அமைச்சர் முதுகலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளார்.