தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிக உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் பலரும் ஊர் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளி முடிந்து மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப நவம்பர் 14ஆம் தேதி வரை கோவை மற்றும் திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து காலை 9 மணிக்கு கிளம்பி திண்டுக்கல்லை பிற்பகல் ஒரு மணிக்கு அடையும். மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி கோவையை மாலை 5.30 மணிக்கு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.