தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் தளபதி போன்று சிறு அளவிலான உடல்நல பிரச்சனைகளை சரி செய்ய ஊரக பகுதிகளை உள்ளடக்கி அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அது ஓராண்டு திட்டம் தான் என விளக்கம் அளித்த அமைச்சர் அதற்கு மாற்றாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக கூறியுள்ளார்.