தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் நடிகை ராஷ்மிகா . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு.  இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில்   நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் “இன்று மரணத்தில் இருந்து தப்பித்தோம்” என பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்ததது .

இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையில் என்ன நடந்தது? என்று தெரியாமல் குழம்பினர். அதாவது  சமீபத்தில், அவர் மும்பை-ஹைதராபாத் விமானத்தில் பயணம் செய்த நிலையில், மும்பையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சுதாரித்துக்கொண்ட விமானி மும்பையில் அவசரமாக தரையிறங்கினார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.