பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வானொலியில் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சியானது வரும் 30-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் நடிகர் அமீர்கான் கூறியதாவது “மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கிய சாதனம் ஆகும்.

மக்கள் பிரதமரை நம்புகின்றனர். மக்கள் ஆதரவோடு அவர் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஒரு தலைவர் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம் ஆகும். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவைதான். இந்த நிகழ்ச்சி மக்கள் இயக்கமாகவே நடைபெறுகிறது. மேலும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று அவர் பேசினார்.