உத்தர் பிரதேச மாநிலம் கோட்டியா கிராமத்தை சேர்ந்தவர்கள் நேபால் சிங் – அஞ்சலி தம்பதி. சம்பவத்தன்று அஞ்சலி வேறொரு நபருடன் வைக்கோல் புதர் ஒன்றில் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை பார்த்த நேபால் சிங் அதிர்ச்சி அடைந்து கடும் ஆத்திரத்திற்கு உள்ளானார். இதனால் அவர் அந்த வைக்கோல் புதருக்கு நெருப்பை வைத்து விட்டு சென்றுவிட்டார்.

இதில் அஞ்சலி தீயில் கருகி உயிரிழந்த நிலையில் அஞ்சலியின் குடும்பத்தினர் நேபால் சிங் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து நேபால் சிங்கை கைது செய்த காவல்துறையினர் அஞ்சலியுடன் இருந்த நபர் குறித்து விபரங்கள் எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.