ராஜஸ்தான் மாநிலம் சூரி மாவட்டம் தாராநகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ட்ரக் ஒன்றில் மோதி விபத்தில் சிக்கினர்.

இந்த விபத்தில் ASI ராமச்சந்திரா உட்பட கான்ஸ்டபிள் கும்பராம், சுரேஷ் மீனா, தனராம், மகேந்திரா என ஐந்து போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீதம் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் அசோக் கெலட் இரங்கல் தெரிவித்துள்ளார்.