மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பர்கனஸ் மாவட்டத்தின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பிருந்தாபன் – தேபாஸ்ரீ தம்பதி. இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டில் இருந்த துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிருந்தாபன் தூத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மற்ற மூவரும் வெவ்வேறு இடத்தில் உயிரிழந்து கிடந்தனர். வீட்டில் காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் தற்கொலை கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது.

அதில் பிருந்தாபன் தனது மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதால் இத்தகைய முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி மனைவி மற்றும் பிள்ளைகளை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு பிருந்தாபன் தூக்கில் தொங்கியதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.