மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குர்லா பகுதியில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சூட்கேஸுக்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. அந்தப் பெண் யார் என்பது பற்றிய விபரம் இதுவரை தெரியாத நிலையில் அவரது வயது 25 இல் இருந்து 35க்குள் இருக்கலாம் என்றும் அவர் டி-ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் சடலத்தை சிவில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.