கருவுற்றிருந்த ஒரு பெண் குதிரையை அதன் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கி, அது மயங்கி விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அண்டை வீட்டார் ஒருவரால் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட இந்தக் காட்சி, அந்தக் குதிரையின் துயரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தப் பதிவின் மூலம் குதிரை அனுபவித்த கொடுமைகள் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று, உடனடியாக அது அந்த நபரிடமிருந்து மீட்கப்பட்டது.
⚡️⚡️‼️The mare was pregnant when she was beaten to death 💔
This is a clip from a video captured by one of the neighbors that led to her rescue and she was healed and started a new safe life in an animal adoption center.
— International Relations (@Intl_Relations0) December 29, 2025
மீட்கப்பட்ட அந்தக் குதிரை விலங்குகள் தத்தெடுப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அதற்குச் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பலரது அன்பு மற்றும் கவனிப்பால் உடல் நலம் தேறிய அந்தக் குதிரை, பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமான ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. தற்போது அந்தத் தாய் குதிரையும் குட்டியும் எந்த பயமும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்கின்றன.
