மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஜூன் 30 இன்று மாலை மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. பணியாளர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதனை தீர்மானிக்கும் தரவு இன்று வெளிவரும். இத்தரவின் அடிப்படையில்தான் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும்.

ஜூலை 2023-ல் ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு கிட்டத்தட்ட உறுதியாகியது. வருகிற மாதங்களில் ஊழியர்கள் 42 சதவிகிதத்திற்கு பதில் 46% அகவிலைப்படியை பெறுவார்கள். ஆகவே  ஜூலை 2023-க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான மே மாதத்திற்கான குறியீட்டு எண்கள் இன்று வெளியிடப்படும். அதன்பிறகு தான் டிஏ மதிப்பெண் எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெரியவரும்.