இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, புதிய தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.