அதிமுக ஆட்சியின் போது பெய்த மழையை விட, இப்போது பெய்துள்ள மழை குறைவு தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசின் திட்டமிடப்படாத பணிகளால் தான் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டர் வாங்கி, எப்போது வெளியேற்றுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்த அவர் வானிலை மையம் முன்பே அறிவித்தும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அதோடு, அதிமுக ஆட்சியில் பெய்த மழையில் 2ல் ஒரு பங்கு தான் தற்போது பெய்துள்ளது என்றும் கூறினார்.