பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்தும் , இசிஆர் மார்க்கமாக செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னையில் இன்று பேசிய அவர், பொங்கல் முடிந்து பயணிகள் சென்னை திரும்ப 16 முதல் 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 17589 பேருந்துகள் பொங்கலுக்கு பின் சொந்த ஊரிலிருந்து வர இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.