புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் சென்னைவாசிகளுக்கு மின்சாரம் தாக்க வாய்ப்பிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பெருமழையின் காரணமாக மாநகரின் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருக்கிறது. இந்த வெள்ளநீர் மின்சார ப்ளாக்குகளுக்கு அருகில் உள்ளது. இதன் வாயிலாக மின்சாரம் பாய வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளோம்” என்று எச்சரித்தார்.