தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதில், கரும்பு, சர்க்கரை, பச்சரிசியுடன் ரூ.1000 அடங்கிய தொகுப்பு இருக்கும். இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.