இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடிகளை ஆரம்பித்துள்ளனர். அயோத்தி தரிசனம், பிரசாதம் மற்றும் புகைப்படங்கள் என போலியான செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். ராமர் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் க்யூ ஆர் குறியீடுகளை அனுப்புவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

அதேசமயம் அயோத்தி பிரசாதம் டெலிவரி என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களுக்கு விருப்பமான எங்களுக்கு செய்திகளை அனுப்புகின்றனர். அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்தால் கணக்குகள் ஹேக் செய்யப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்