அயோத்திக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று பாஜக தலைமை திடீரென தடை விதித்துள்ளது. அயோத்திக்கு வராமல் அவரவர் மாநிலங்களில் ஏதாவது ஒரு கோவிலில் மக்களுடன் இணைந்து டிஜிட்டல் திரையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண வேண்டும். சிறப்பு வழிபாடு பஜனையில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.