மத்திய பிரதேஷ் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்பீர் – மஞ்சு தம்பதி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதியின் மகன் வெளியூரில் தங்கி இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் வார விடுமுறைக்காக இவர்களது மகன் வீட்டிற்கு வந்தபோது தனது தாய் தந்தை என இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டதில் மஞ்சு விஷம் அருந்தியோ அல்லது விஷ ஊசி போட்டோ தற்கொலை செய்து கொண்டதும், பல்பீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. அதோடு பல்பீரின் அருகில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

அதில் நிலுவையில் இருக்கும் அதிகப்படியான கடன் குறித்த கவலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.