தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் மாநகர போக்குவரத்து தனியார் மயமாக்கப்படாது. புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.