மாதவிடாய் வலி மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

இந்த மாத்திரை உட்கொண்டு இரண்டு முதல் எட்டு வாரங்களுக்கு பிறகு தோல் எரிச்சல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல் இல்லாமல் வலி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.