திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ராவை  பதவி நீக்கம் செய்ய மக்களவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தொழிலதிபர் ஒருவருக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சொல்லை அளித்தார். அதன் மூலமாக இந்த தொழிலதிபர் நாடாளுமன்ற வலைத்தளத்தை அணுகி பல கேள்விகளை கேட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செய்திருக்க வேண்டிய வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தது தவறு. வேறு ஒருவருக்கு எப்படி கடவுச்சொல்லை அளிக்கலாம்?  என்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பாக நாடாளுமன்றத்தின் நன்னடத்தை குழு விசாரணை நடத்தியது.

குழுவின் அறிக்கையை இன்று மக்களவைத் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையிலேயே மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தற்போது மக்களவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறத.  மத்திய அமைச்சர் பிரகலாத் ஷோஷி  தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.