சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது.

நீட் சேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்தும். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திமிராக பேசியுள்ளார். இதிலிருந்தே அவரின் அறியாமை வெளிப்படுகிறது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.