நாட்டின் 77 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் நிலையங்களில் பயணிகளை போலீசார் மெட்டல் டிரக்டர் மூலம் சோதனை நடத்துகின்றனர். தண்டவாள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இதனைப் போலவே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.