சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில் , இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களை திசை திருப்புவதற்காக திமுகவினர் நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுக்கின்றனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக எம்பிக்கள் ஏன் குடியரசு தலைவரை பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.