ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஹரியானாவில் பாஜக கவிழும் நிலைக்கு தள்ளப்படும்.