விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இடையில் சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள தர்மாவரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதில் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்ற நிலையில் அப்போது நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அது தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.