திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இதில் காளி ராஜும் அவரது இரண்டு மகன்களும் மாற்று திறனாளி. இதில் ஒரு மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மகேஸ்வரியின் தாய் செல்வக்கனி அவரை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் உடல் கருகிய நிலையில் மகேஸ்வரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேஸ்வரி மீது யாராவது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.