திருச்சி மாவட்டத்திலுள்ள ஏகிரி மங்கலம் பகுதியில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆறுமுகம் என்பவர் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் ரஜினியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். மேலும் பாக்யராஜ் என்பவர் ரஜினியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலையில் இருந்த ரஜினி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.