திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கபட்டியில் முத்துச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ரவி(19) திருச்சி அரியமங்கலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முத்துச்செல்வன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதனை ரவி தட்டி கேட்டதால் கடந்த 17-ஆம் தேதி தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த முத்துச்செல்வன் தனது மகனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த ரவியை அகம்பாக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான முத்துச்செல்வனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.